உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே போலீஸ்காரரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1¼ லட்சம் கொள்ளை
- செங்கல்பட்டு போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
- காரின் உள்ளே வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். செங்கல்பட்டு போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது மகளின் பிரசவ செலவிற்காக திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள வங்கியில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு காரில் சென்றார்.
அப்போது காக்களூர் பை பாஸ் சாலையில் மற்றொரு வங்கி எதிரே காரை நிறுத்தி விட்டு வங்கியின் உள்ளே சென்றார். திரும்பி வந்தபோது கார் கண்ணாடி உடைந்து இருந்தது. காரின் உள்ளே வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.