உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே கல்லூரி காவலாளி அடித்துக் கொலை

Published On 2022-07-12 13:14 IST   |   Update On 2022-07-12 13:14:00 IST
  • திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டையில் தனியார் பெண்கள் கல்லூரி உள்ளது.
  • கல்லூரி காவலாளியை கஞ்சா போதை கும்பல் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருத்தணி:

திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டையில் தனியார் பெண்கள் கல்லூரி உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது55) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு அவர் வழக்கம் போல் பணியில் இருந்தார். அப்போது வாலிபர்கள் சிலர் கல்லூரி வளாகத்துக்குள் கஞ்சா, மது போதையில் சுற்றி வந்தனர். அவர்களை சுப்பிரமணி கண்டித்தார். இதனால் கஞ்சா போதையில் இருந்த கும்பலுக்கும், சுப்பிரமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆத்திரம் அடந்த போதை கும்பல் சுப்பிரமணியை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அவ்வழியே சென்றவர்கள் காவலாளி சுப்பிரமணி இறந்து கிடப்பதை கண்டு பொதட்டூர் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.கொலையாளிகள் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்லூரி காவலாளியை கஞ்சா போதை கும்பல் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News