உள்ளூர் செய்திகள்

போலி ஆவணம் தயாரித்து பலகோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு- ஜவுளிக்கடை உரிமையாளர் கைது

Published On 2023-06-10 06:42 GMT   |   Update On 2023-06-10 06:42 GMT
  • முகமது இப்ராகிம் இறந்த சில நாட்களில் அவரே தனக்கு சொத்துக்களை உயில் எழுதி வைத்ததாக அப்துல் ஹக் போலி ஆவணம் தயாரித்துள்ளார்.
  • முகமது இப்ராகிமின் மனைவி ரஹிமா பீவி மோசடி குறித்து வீரசோழன் போலீசில் புகார் செய்தார்.

திருச்சுழி:

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை அடுத்துள்ள வீரசோழன் மேலவண்டல் தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் அப்துல் ஹக் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக தெரிகிறது.

முகமது இப்ராகிம் இறந்த சில நாட்களில் அவரே தனக்கு சொத்துக்களை உயில் எழுதி வைத்ததாக அப்துல் ஹக் போலி ஆவணம் தயாரித்துள்ளார். இதனை தனது பெயருக்கு மாற்ற பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையறிந்த முகமது இப்ராகிமின் மனைவி ரஹிமா பீவி மோசடி குறித்து வீரசோழன் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து ரஹிமா பீவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வீரசோழன் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இறந்தவர் தனக்கு உயில் எழுதி வைத்தது போல் போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்புள்ள நிலத்தை அப்துல் ஹக் அபகரிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News