உள்ளூர் செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி மாணவியிடம் ஆன்லைனில் ரூ.50 ஆயிரம் பணம் பறிப்பு

Published On 2023-06-02 09:45 GMT   |   Update On 2023-06-02 09:45 GMT
  • போனில் பேசிய நபர் மாணவியின் ஆண் நண்பரை போலவே குரலை மாற்றி பேசி ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
  • மாணவிக்கு தெரிந்த நபர்கள் யாரும் இதுபோன்று பேசி ஏமாற்றினார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சென்னை:

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு நேற்று செல்போன் அழைப்பு வந்தது. போனில் பேசிய நபர் மாணவியின் ஆண் நண்பர் போலவே பேசினார்.

அப்போது அவர் தனக்கு அவசரமாக மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும், உடனடியாக ரூ. 50 ஆயிரம் பணம் அனுப்பமுடியுமா? என்றும் கேட்டுள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய மாணவி ஆண் நண்பர் கூறிய எண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் இது தொடர்பாக தனது நண்பரை தொடர்பு கொண்டு மாணவி கேட்டபோதுதான் மோசடி நபர் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.

போனில் பேசிய நபர் மாணவியின் ஆண் நண்பரை போலவே குரலை மாற்றி பேசி ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோசடி நபர் தொழில்நுட்ப ரீதியாக மாணவியின் ஆண் நண்பரின் குரலை தெரிந்து கொண்டு வெளி மாநிலத்தில் இருந்து ஏமாற்றினாரா? என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் மாணவிக்கு தெரிந்த நபர்கள் யாரும் இதுபோன்று பேசி ஏமாற்றினார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News