உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை அருகே மாணவிகளை கேலி செய்ததை தட்டிக் கேட்ட தந்தை வெட்டி கொலை

Published On 2023-04-23 11:50 IST   |   Update On 2023-04-23 11:50:00 IST
  • அஜித் தனது கையில் வைத்திருந்த கத்தியால் சுந்தரேசனின் தலையில் வெட்டினார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அஜித் மற்றும் சரண் ஆகியோரை தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது48) இவர் சிப்காட் பேஸ்-3 பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இவரது 2 மகள்கள் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் சுந்தரேசனின் மகள்கள் கல்லூரி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது லாலாப்பேட்டையை சேர்ந்த அஜித் (22) மற்றும் சரண் ஆகிய இருவரும் கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து மாணவிகள் தனது பெற்றோரிடம் கூறினர். மாணவிகளின் தந்தை சுந்தரேசன், அஜித் மற்றும் சரணிடம் இதுபற்றி தட்டி கேட்டார்.

இதில் ஆத்திரமடைந்த இருவரும் சுந்தரேசனை தாக்கினர். அஜித் தனது கையில் வைத்திருந்த கத்தியால் சுந்தரேசனின் தலையில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சுந்தரேசன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுந்தரேசன் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அஜித் மற்றும் சரண் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News