மத்திகிரியில் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
- தின்னூர் பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக அருண்குமார் பணியாற்றி வந்தார்.
- தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணிகிரி:
திண்டுக்கல் மாவட்டம் ஆலாம்பாடி சோளம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மகன் அருண்குமார் (வயது26). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியில் உள்ள தின்னூர் பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவர் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சென்று பணத்தை வசூல் செய்து வந்தார். அருண்குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எந்த பலனும் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று மதியம் அறையில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடனே அங்கு வந்து அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.