உள்ளூர் செய்திகள்
ஆரம்ப பள்ளிகள் ஜனவரி 5-ந்தேதி திறப்பு
- அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.
- மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆணையர் அறிவித்துள்ளார்.
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆணையர் அறிவித்துள்ளார்.