உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே டிராக்டர் மோதி ஊழியர் பலி

Published On 2022-07-17 14:51 IST   |   Update On 2022-07-17 14:51:00 IST
மணலி புதுநகர் அடுத்த இடையஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.

பொன்னேரி:

மணலி புதுநகர் அடுத்த இடையஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது46). தனியார் இன்சூரன்சு கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் நோக்கி மோட்டார் சைககிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் சீனிவாசன் பலியானார்.

Tags:    

Similar News