உள்ளூர் செய்திகள்

ஆவடியில் உள்ள வீட்டில் கொடுங்கையூர் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-07-26 09:19 GMT   |   Update On 2022-07-26 09:19 GMT
  • கடந்த 7 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் போலீஸ்காரர் திருநாவுக்கரசு கோவில் பதாகையில் வசித்து வந்தார்.
  • திருநாவுக்கரசுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆவடி:

கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தவர் திருநாவுக்கரசு. 39 வயதான இவர் ஆவடி அருகே உள்ள கோவில் பதாகை பகுதியில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

இவரது மனைவி கலைச்செல்வி. 10 வயதில் ரசிகா என்ற மகளும், 6 வயதில் ரக்‌ஷன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் போலீஸ்காரர் திருநாவுக்கரசு கோவில் பதாகையில் வசித்து வந்தார். திருநாவுக்கரசுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருநாவுக்கரசின் மனைவி கலைச்செல்வி புரசைவாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த திருநாவுக்கரசு படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி அவரது நண்பர் சுரேந்தர் ஆவடி டேஸ்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதன் பேரில் போலீசார் விரைந்து சென்று திருநாவுக்கரசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News