உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லி அருகே இளம்பெண் கொலையில் தாயின் கள்ளக்காதலனை பிடிக்க போலீசார் தீவிரம்

Published On 2022-11-13 11:21 GMT   |   Update On 2022-11-13 11:21 GMT
  • அம்சவல்லியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் கள்ளக்காதலன் ராஜு சம்பவத்தன்று தனியாக இருந்த சங்கீதாவை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
  • சங்கீதாவுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்ய நிச்சயித்து இருந்தனர். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

பூந்தமல்லி:

பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி. கணவரை பிரிந்து வாழும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சங்கீதா (வயது18).

நேற்று காலை அம்சவல்லி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் உள்ள அறையில் மகள் சங்கீதா கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த கம்மல், கொலுசு, மற்றும் வீட்டில் இருந்த பணம் கொள்ளை போய் இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி, இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் அம்சவல்லிக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜூ(38) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது தெரிந்தது.

மேலும் அம்சவல்லியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் கள்ளக்காதலன் ராஜு சம்பவத்தன்று தனியாக இருந்த சங்கீதாவை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

சங்கீதாவுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்ய நிச்சயித்து இருந்தனர். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

வீட்டில் சங்கீதா தனியாக இருப்பதை அறிந்து வந்த ராஜு அவரிடம் தவறாக நடக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதையடுத்து தலைமறைவாக உள்ள ராஜுவை தனிப்படை போலீசார் தேடிவருகிறார்கள். அவர் சிக்கினால் தான் கொலைக்கான காரணம் என்ன? மற்றும் கொலை எப்படி நடந்தது? என்பது தெரியவரும்.

Tags:    

Similar News