உள்ளூர் செய்திகள்

காசிமேட்டில் 22 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி திடீர் தற்கொலை

Published On 2023-09-03 12:30 IST   |   Update On 2023-09-03 12:30:00 IST
  • வீட்டில் இருந்த திருப்பதி திடீரென மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • ரவுடி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராயபுரம்:

காசிமேடு, எஸ்.என்.செட்டி தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது 41).பிரபல ரவுடி. இவர் மீது 4 கொலை வழக்கு, 4 ஏ.டி.எம். கொள்ளை உள்பட மொத்தம் 22 வழக்குகள் உள்ளன. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் வீட்டில் இருந்த திருப்பதி திடீரென மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது ரவுடி திருப்பதி தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து காசிமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து திருப்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரவுடி திருப்பதி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வாரணாசி சென்று திரும்பி வந்து உள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து இருக்கிறார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

திருப்பதி கடந்த சில மாதங்களாக திருந்தி வாழ்ந்து வந்ததாக கூறி உள்ளார். பெண்விவகாரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரனும் மிரட்டல் விடுத்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவுடி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News