உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2022-11-26 11:08 GMT   |   Update On 2022-11-26 11:08 GMT
  • கீர்த்தனாவின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. உடனே மகளுக்கு போன் செய்தும் அவர் போன் எடுக்கவில்லை.
  • ஜன்னல் வழியாக பார்த்த போது கீர்த்தனா படுக்கை அறையில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த வயலூர் கிராமம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளி. இவரது மகள் கீர்த்தனா (வயது 17). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

சில நாட்களாக கீர்த்தனா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கீர்த்தனாவின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. உடனே மகளுக்கு போன் செய்தும் அவர் போன் எடுக்கவில்லை.

இதனால் அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது கீர்த்தனா படுக்கை அறையில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து இறந்த கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News