உள்ளூர் செய்திகள்

காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2024-03-19 07:01 GMT   |   Update On 2024-03-19 07:08 GMT
  • பல நாட்களாக குடிநீர் இன்றி இப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
  • அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியாம்பட்டி ஊராட்சியில் காமராஜர் நகர் பெரியாம்பட்டி, புல்லுக்குறிச்சி, ஜொல்லம்பட்டி, காசி கொல்லன் கொட்டாய், உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இதில் புள்ளுக்குறிச்சி, காமராஜர்நகர், பெரியாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மாதத்திற்கு ஒரு முறை ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் உள்ளூரில் வழங்கப்படும் உப்பு தண்ணீர் கூட வழங்கப்படுவதில்லை.

பல நாட்களாக குடிநீர் இன்றி இப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தொடர்ந்து ஊராட்சி , மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறியிட்டும் எவ்வித நடவடிக்கை இல்லை .

இதனால் குடிநீர் இன்றி அவதி அடைந்து வந்த காமராஜர் நகர் ,புல்லுக்குறிச்சி, பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த பெண்கள் பொதுமக்கள் காலி குடும்பங்களுடன் தர்மபுரி-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பெரியாம்பட்டிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் இன்று காலை குடிநீர் கேட்டு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர் .

சாலை மறியல் ஈடுபட்டு வந்த பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் உதயசங்கர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News