உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் என்ஜினீயர் திடீர் தற்கொலை

Published On 2022-06-05 17:51 IST   |   Update On 2022-06-05 17:51:00 IST
  • பண்ருட்டி எல்.என்.புரம் நைனார் நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன்கார்த்திக் என்ஜினீயர்.
  • பண்ருட்டியில் என்ஜினீயர் திடீர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

பண்ருட்டி:

பண்ருட்டி எல்.என்.புரம் நைனார் நகரை சேர்ந்தவர் ரவி.இவரது மகன்கார்த்திக்(வயது 29), என்ஜினீயர்.

இவர் வெளி நாட்டில்வேலை பார்த்து விட்டு கடந்த 3 மாதமாக வீட்டில் இருந்து வருகிறார் வீட்டில் பெட்டிகடை நடத்திவந்தார்.வருமானம்போதவில்லை எனமன உளைச்சலில் இருந்து வந்தார்

இவர் கடந்த 31-ந் தேதி எலிமருந்து சாப்பிட்டார். மயங்கிய நிலையில் இருந்த இவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில்சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை வருகின்றனர்.

Tags:    

Similar News