உள்ளூர் செய்திகள்

ஓட்டேரி மேம்பாலம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபர் கைது

Published On 2023-09-01 17:45 IST   |   Update On 2023-09-01 17:45:00 IST
  • திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி மேம்பாலம் அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு உள்ள முள்புதரில் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ரகு (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News