உள்ளூர் செய்திகள்

உதவி செய்வது போல் நடித்து 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த நர்சரி உரிமையாளர்

Published On 2022-10-07 04:08 GMT   |   Update On 2022-10-07 04:08 GMT
  • மாணவியின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோா், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.
  • பரிசோதனையில் மாணவி 8 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

ஊட்டி:

ஊட்டியைச் சோ்ந்தவா் சேகா்(50). இவா் தனியாா் நா்சரி உரிமையாளராக உள்ளாா்.

இவரது வீட்டின் அருகே 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சேகா் அந்த மாணவியை தனது காரில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்போது மாணவியை அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவியின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோா், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.

அங்கு பரிசோதனையில் மாணவி 8 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் இதுகுறித்து உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

போலீசாா் விசாரணையில், சேகா் அந்த மாணவியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்ததும், வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஊட்டி அனைத்து மகளிா் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சேகா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தாா். பின்னா் ஊட்டி மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் அவரை ஊட்டி கிளை சிறையில் அடை க்கப்பட்டார்.

Tags:    

Similar News