உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே வடமாநில வாலிபர் தற்கொலை
- காமராஜர் தெருவில் நண்பருடன் தங்கி இருந்தபோது நீண்ட நேரம் உறவினருடன் செல்போனில் பேசி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
- தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவவர் ராகுல் (வயது25). கட்டிட தொழிலாளி. இவர் திருவள்ளூரை அடுத்த திருவலங்காடு பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு ராகுல் திருவள்ளூர் காமராஜர் தெருவில் நண்பருடன் தங்கி இருந்தபோது நீண்ட நேரம் உறவினருடன் செல்போனில் பேசி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதன்பின்னர் ராகுல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.