உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே மழைகால பாதிப்பை தடுக்க ரூ.84 லட்சம் செலவில் புதிய தரைப்பாலம்

Published On 2022-07-06 07:43 GMT   |   Update On 2022-07-06 07:43 GMT
சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணி மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு அத்திப்பட்டு ஊராட்சி மன்றத்தலைவர் சுகந்தி வடிவேல் துணைத்தலைவர் கதிர்வேல் ஆகியோர் பேரிடர் பாதுகாப்பு கண்காணிப்பாளரிடம் தாங்கல் கால்வாய் பகுதியில் செல்லும் வடசென்னை அனல்மின் நிலைய சாலையின் குறுக்கே சிறிய பாலத்சிதை அகற்றி பெரிய பாலமாக மாற்றி தர வேண்டும் என மனு அளித்தனர்.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் புதிய தரைப்பாலம் அமைக்க காமராஜர் துறைமுக சமுதாய வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.84 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

அதன்படி சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணி மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி இரண்டு மாதத்திற்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News