உள்ளூர் செய்திகள்

நெல்லையில் கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

Published On 2024-02-03 15:51 IST   |   Update On 2024-02-03 15:51:00 IST
  • வண்ணார்பேட்டையில் கவர்னர் வரும் போது கருப்பு கொடி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
  • கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 800 போலீசார் நெல்லை மாநகர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நெல்லை:

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நெல்லை மனோணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார்.

அவர் அங்கிருந்து கார் மூலமாக நெல்லை மாநகர பகுதி வழியாக நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வளாகத்திற்கு வந்தார். அவரது வருகையை ஒட்டி மாநகரப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் மகாத்மா காந்தி குறித்து அவர் பேசியதை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் வண்ணார்பேட்டையில் கவர்னர் வரும் போது கருப்பு கொடி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை போலீசார் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். காங்கிரஸ் அலுவலகம் முன்பு இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு அடைத்ததுடன் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட கண்காணிப்பு வாகனம் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்தது.

இந்நிலையில், கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரசார் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கட்சி அலுவலகம் முன்பு கருப்பு சட்டை அணிந்து திரண்டனர். பின்பு அலுவலகம் முன்பு அமர்ந்து காந்தி பற்றி கவர்னர் பேசியதை கண்டித்து காந்தியின் புகழ் பாடும் ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பஜனை பாடலை பாடி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 800 போலீசார் நெல்லை மாநகர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News