உள்ளூர் செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு

Published On 2022-07-07 07:27 GMT   |   Update On 2022-07-07 07:27 GMT
  • மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு அளித்துள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு எண்ணிக்கை 2,442 ஆக உயர்ந்தது.
  • ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழுவை திட்டமிட்ட படி 11-ந்தேதி நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் பொதுக்குழுவில் பங்கேற்க தயாராகி வருகிறார்கள்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்கள்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீடுகளில் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். எடப்பாடி பழனிசாமி வீட்டில் கே.பி.முனுசாமி உள்ள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். மொத்தம் உள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,441 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் அவரை சந்தித்து ஆதரவு அளித்தார்.

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதி பழனி செட்டிப்பட்டி பேரூராட்சியை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து ஆதரவை தெரிவித்தார். இதனால் அவரது ஆதரவு எண்ணிக்கை 2,442 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். வழக்கு விசாரணை இன்று மாலையில் வரும் நிலையில் அடுத்தக்கட்ட நிகழ்வு குறித்து ஆலோசித்தனர்.

Tags:    

Similar News