உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்

Published On 2023-06-10 05:21 GMT   |   Update On 2023-06-10 07:18 GMT
  • கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும்.
  • மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் வகுப்புகள் நடத்தப்படும்.

சென்னை:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளிக்கூடங்களை திறக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும். கோடை விடுமுறைகளை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாடங்களை விரைந்து முடிக்க இனி சனிக்கிழமையிலும் வகுப்புகள் நடைபெறும்.

மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும்.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான தகவல் வரவில்லை. 9-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் போட்டியில் பங்கேற்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News