உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி அருகே எம்.ஜி.ஆர் சிலை உடைப்பு-பதட்டம் போலீஸ் குவிப்பு

Published On 2022-10-14 14:01 IST   |   Update On 2022-10-14 14:01:00 IST
  • எம்.ஜி.ஆர் சிலை உடைப்பு குறித்து கிளை அ.தி.மு.க. செயலாளர் ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
  • பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டதால் ஆவினன்குடி போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே எம். ஜி.ஆர்., சிலை உள்ளது.

நேற்று இரவு எம்.ஜி.ஆர். சிலையின் இடது கையை மர்மநபர்கள் உடைத்து உள்ளனர். இதனை இன்று பார்த்த அ.தி.மு.க.வினர் அதிரச்சி அடைந்தனர்.

இதுபற்றி கிளை அ.தி.மு.க. செயலாளர் ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் அப்பகுதியில் அதிமுகவினர் தொடர்ந்து குவிந்தவாறு உள்ளனர். இதனால் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டதால் ஆவினன்குடி போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ உடைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை பார்வையிட்டு இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

Similar News