உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,489 கனஅடியாக சரிவு

Published On 2023-05-13 09:43 IST   |   Update On 2023-05-13 09:43:00 IST
  • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
  • நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

நேற்று, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 5,253 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 4,489 கன அடியாக குறைந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.53 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 103.70 அடியாக உயர்ந்தது.

Tags:    

Similar News