உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் செல்போன் கடை வியாபாரி திடீர் மாயம்

Published On 2022-07-02 11:46 IST   |   Update On 2022-07-02 11:46:00 IST
  • கடந்த மாதம் 27-ந்தேதி சென்னைக்கு சென்று செல்போன் சர்வீஸ் செய்து வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
  • நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

பொன்னேரி:

பொன்னேரி பாலாஜி நகரைச்சேர்ந்தவர் மகேஷ் (37). இவர் பொன்னேரி ரெயில்வே சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

கடந்த மாதம் 27-ந்தேதி சென்னைக்கு சென்று செல்போன் சர்வீஸ் செய்து வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனால் அவரது குடும்பத்தினர் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News