உள்ளூர் செய்திகள்
லாரி டிரைவரை கத்தி முனையில் மிரட்டியவர் கைது
- மர்ம வாலிபர் டிரைவர் சக்திவேலை கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறிக்க முயன்றார்.
- புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீஞ்சூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (40). லாரி டிரைவர். இவர் மீஞ்சூர் அடுத்த நாலூர் இந்துஜா நகர் அருகே லாரியில் இருந்து பொருட்களை இறக்கி விட்டு வந்து கொண்டிருந்தார்.
அப்போது மர்ம வாலிபர் டிரைவர் சக்திவேலை கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறிக்க முயன்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீஞ்சூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.