உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு பகுதியில் பறவைகளை வேட்டையாடியவர் கைது

Published On 2023-03-16 14:28 IST   |   Update On 2023-03-16 14:28:00 IST
  • திருக்கழுக்குன்றம் பகுதியில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
  • வனத்துறை அதிகாரிகள் வாலிபரை கைது செய்து வேட்டையாடப்பட்ட பறவைகளை பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்கல்பட்டு வனச்சரக அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருக்கழுக்குன்றம் பகுதியில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்த போது அதில், வேட்டையாடப்பட்டு தோல் உரித்து சுத்தம் செய்யப்பட்ட நிலையில் நீர்க்காகம்-3,வெள்ளை கொக்கு-10 இருந்தன.

விசாரணையில் அவர் கொத்திமங்களம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பது தெரிந்தது. அவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து வேட்டையாடப்பட்ட பறவைகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, பறவைகளை வேட்டையாடுவது மற்றும் இறைச்சி ள் விற்பது மற்றும் வாங்குவது குற்றம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளனர்.

Tags:    

Similar News