உள்ளூர் செய்திகள்

நெருக்கமாக இருக்கும் வீடியோவை காட்டி கள்ளக்காதலி பணம் கேட்டு மிரட்டியதால் லாரி டிரைவர் தற்கொலை

Published On 2023-10-14 04:55 GMT   |   Update On 2023-10-14 04:55 GMT
  • இளம்பெண் செல்வகுமாருடன் ஜாலியாக இருப்பதை அவரது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருந்தார்.
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும், செல்வகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள புளியன்கண்டியை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது28). லாரி டிரைவர்.

இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கவுசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்தார். திருமணமான ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் பிரிந்தனர்.

இதையடுத்து செல்வகுமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்பனா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு செல்வகுமாருக்கு தெக்கோட்டு வாய்க்காலை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

இளம்பெண் செல்வகுமாருடன் ஜாலியாக இருப்பதை அவரது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும், செல்வகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து லாரி டிரைவர் கள்ளக்காதலியிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் ஜாலியாக இருக்கும் போது எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக செல்வகுமாரை மிரட்டி பணம் கேட்டார்.

இதனால் பயந்த அவர் ரூ.1.50 லட்சம் வரை பணத்தை இளம்பெண்ணிடம் கொடுத்தார். ஆனால் இளம்பெண் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்தார்.

இதன் காரணமாக செல்வகுமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த செல்வகுமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவர்கள் இதுகுறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு செல்வகுமார் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

அதில் இளம்பெண்ணுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் நாங்கள் ஜாலியாக இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்து என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்.

பணம் கொடுக்கவில்லை என்றால், அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி என்னிடம் இருந்து ரூ.1.50 லட்சம் வரை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இதுபோன்று பணம் கேட்டு மிரட்டி வந்ததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.

பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட லாரி டிரைவர் செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News