உள்ளூர் செய்திகள்

கே.வி.குப்பம் அருகே கூலி தொழிலாளி கல்லால் தாக்கி கொலை

Published On 2023-02-27 14:27 IST   |   Update On 2023-02-27 14:27:00 IST
  • கே.வி. குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • சாமுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நாகல் பஞ்சாயத்துக்குட்பட்ட தேன்கனி மலை கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி இவரது மூத்த மகன் சேகர் (வயது 35) கூலி வேலை செய்து வந்தார்.

2-வது மகன் சாமு (32). இவர்கள் அருகருகே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சேகர் மதுபோதையில் அவரது தம்பி சாமுவின் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த சாமு அண்ணன் சேகரை தாக்கினார். அப்போது கீழே விழுந்த சேகரின் தலையில் கல்லால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சேகர் இறந்துவிட்டார்

கே.வி. குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சாமுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான சேகருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி ஒரு மகன், மகள் உள்ளனர். அவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News