உள்ளூர் செய்திகள்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விஜய் வசந்த் எம்.பி.

Published On 2024-01-24 14:30 IST   |   Update On 2024-01-24 14:30:00 IST
  • கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி. மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
  • மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய கூடிய நவீன இயந்திரத்தை விஜய் வசந்த் அறிமுகப்படுத்தி வைத்து சிறப்புரையாற்றினார்.

கன்னியாகுமரி:

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் விவரம் வருமாறு:-

முளகுமூடு கோடியூர் புனித பவுல் சி.எஸ்.ஐ. சேகர சபை சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற ஷாலினி - செகின் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.


தக்கலை புன்னை நகர் மைக்கேல் ராஜ்- லைலா மேரி ஆகியோரது புதல்வி கார்மல் மேரி மற்றும் பிரதீஷ் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.


 நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி. மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி சகாய செல்வி, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.


தென் தமிழகத்தில் முதல் முறையாக ஸ்ரீனிவாசா மருத்துவமனையில் ரோபோட்டிக் துல்லியத்துடன் முழுமையான மூட்டு நிவாரணம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய கூடிய நவீன இயந்திரத்தை விஜய் வசந்த் அறிமுகப்படுத்தி வைத்து சிறப்புரையாற்றினார்.


ரீத்தாபுரம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதரவற்ற ஏழை விதவைக்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்பட்டது. இந்த வீட்டை சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாவட்ட தலைவர் கே.டி.உதயம் ஆகியோருடன் இணைந்து பாராளுமன்ற விஜய் வசந்த் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News