உள்ளூர் செய்திகள்

காக்களூரில் வருகின்ற 18ம் தேதி மின்சார நிறுத்தம்

Published On 2022-06-15 11:00 GMT   |   Update On 2022-06-15 11:00 GMT
  • மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் பாதைகளில் பராமரிப்பு பணி.
  • பூண்டி, ஒதப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் கோட்டத்தை சார்ந்த காக்களூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகின்ற 18ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டிருக்கும். அந்த நேரம் காக்களூர்,காக்களூர் சிட்கோ, நரசிங்கபுரம், ஆஞ்சநேயபுரம், புல்லரம்பாக்கம்,மெய்யூர், குஞ்சலம்,பென்னலூர்பேட்டை, ஈக்காடு, செவ்வாப்பேட்டை, காக்களூர் ஹவுசிங் போர்டு, பூண்டி, ஒதப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News