உள்ளூர் செய்திகள்

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் தொழில் நுட்பத்தில் 4 இடங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையம்

Published On 2023-09-15 17:37 IST   |   Update On 2023-09-15 17:37:00 IST
  • நீர் சுத்திகரிப்பு நிலையம், அணுசக்தி துறையின் தொழில் நுட்பத்தில் நிறுவப்பட்டது.
  • திருக்கழுக்குன்றம் பி.ஜே.பி பிரமுகர் தனசேகர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

மாமல்லபுரம்:

கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் சார்பில், மத்திய அரசின் "தூய்மை இந்தியா" திட்டத்தின் கீழ், 15லட்சம் ரூபாய் செலவில், சதுரங்கபட்டினம் மீனவர் குடியிருப்பு, காவாக்கரை, கல்பாக்கம் கே.வி-2 ஸ்கூல், திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனை ஆகிய நான்கு இடங்களில் மக்கள் பயன்படுத்த சுத்தமான குடிநீர் வசதிக்காக தலா 500லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், அணுசக்தி துறையின் தொழில் நுட்பத்தில் நிறுவப்பட்டது.

அவைகளை மக்களின் பயன்பாட்டிற்கு இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் திறந்து வைத்தார். சதுரங்கபட்டினம் ஊராட்சி தலைவர் ரேவதி சாமிநாதன், திருக்கழுக்குன்றம் பி.ஜே.பி பிரமுகர் தனசேகர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News