உள்ளூர் செய்திகள்

வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

Published On 2022-08-11 07:16 GMT   |   Update On 2022-08-11 07:16 GMT
  • கடந்த சில மாதங்களாக அன்பரசன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்தார்.
  • இதனை மனைவி அனுசுயா கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் குமரன் நகரை சேர்ந்தவர் அன்பரசன் (வயது34). தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில மாதங்களாக அன்பரசன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்தார்.

இதனை மனைவி அனுசுயா கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த அன்பரசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News