உள்ளூர் செய்திகள்

7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: லாரி டிரைவர் கைது

Published On 2022-10-07 09:04 GMT   |   Update On 2022-10-07 09:04 GMT
  • வாலிபர் ஒருவர் மாணவியிடம் பேச்சு கொடுத்து அருகில் நிறுத்தப்பட்டு இருந்த லாரிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
  • இதுகுறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அம்பத்தூர்:

அம்பத்தூரை அடுத்த கச்சனங்குப்பம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் பேச்சுகொடுத்து அருகில் நிறுத்தப்பட்டு இருந்த லாரிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி விசாரணை நடத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான செந்தில் என்பவரை கைதுசெய்தார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News