உள்ளூர் செய்திகள்

பெரியகுளத்தில் அரசு மருத்துவ கல்லூரி பெண் டாக்டர் தற்கொலை

Published On 2022-11-28 09:17 IST   |   Update On 2022-11-28 09:17:00 IST
  • உயிர்களை காப்பாற்ற வேண்டிய டாக்டரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி சுமித்ரா. இவர்கள் மகள் மதுமிதா (வயது26). இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு முடித்து விட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

மகளின் மருத்துவ படிப்பு மற்றும் புதிதாக வீடு கட்ட நாராயணசாமி பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்தார். மேலும் அவர் கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாததால் பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

மேலும் மது பழக்கமும் இருந்ததால் மனஉளைச்சலில் இருந்த மதுமிதா மற்றும் சுமித்ரா ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி மதுமிதா விஷ மருந்தையும், சுமித்ரா அதிக அளவில் சர்க்கரை நோய் மாத்திரைகளையும் தின்று தற்கொலைக்கு முயன்றனர். வீட்டில் மயங்கி கிடந்த இவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 2 பேரையும் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மதுமிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சுமித்ரா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிர்களை காப்பாற்ற வேண்டிய டாக்டரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News