உள்ளூர் செய்திகள்

தற்கொலை செய்த அர்ஜூணன், அவரது மகன் உதயகுமார்.


குடும்பத்தகராறில் விபரீதம்- தூக்குப்போட்டு தந்தை- மகன் தற்கொலை

Published On 2022-06-28 10:09 IST   |   Update On 2022-06-28 10:09:00 IST
  • குடிபோதையில் வந்த அர்ஜூணன் தனது மனைவியை தாக்கினார். இதனால் வேதனை அடைந்த அவர் வீட்டில் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
  • இதனை நேரில் பார்த்த அவரது மகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரும் அந்த மரத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் மேல்வாழை கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ஜூணன் (வயது 55). விவசாயி. இவரது மகன் உதயகுமார் (25).

கடந்த சில நாட்களாக அர்ஜூணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.

உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர். எனினும் இந்த பிரச்சினை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வந்தது.

நேற்று இரவும் இந்த பிரச்சினை வெடித்தது. எனவே, குடிபோதையில் வந்த அர்ஜூணன் தனது மனைவியை தாக்கினார். இதனால் வேதனை அடைந்த அவர் வீட்டில் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

இதனை நேரில் பார்த்த அவரது மகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரும் அந்த மரத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை தந்தை-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீபோல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தற்கொலை செய்த தந்தை-மகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News