நாவலூர் அடுக்குமாடி குடியிருப்பில் 7-வது மாடியில் இருந்து விழுந்து என்ஜினீயர் பலி
- நாவலூரை அடுத்துள்ள ஏகாட்டூரில் தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
நாவலூரை அடுத்துள்ள ஏகாட்டூரில் தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பிரனேஷ் (வயது28) என்பவர் 7-வது மாடியில் வசித்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரனேஷ், வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இரவு அவர் வீட்டின் பால்கனியில் தூங்கினார்.
அதிகாலை எழுந்தபோது பிரனேஷ் வீட்டின் 7-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்பில் இருந்தவர்கள் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் வேலு, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் விரைந்து வந்து பிரனேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரனேஷ் மது போதையில் கீழே விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்