உள்ளூர் செய்திகள்
15 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை- எலக்ட்ரீசியன் கைது
- கடந்த ஒரு வருடமாக மாணவியிடம் தகாத முறையில் நடந்து உள்ளார்.
- பாலியல் சீண்டல் குறித்த விவரங்களை சிறுமி கூறியவுடன் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
சென்னை:
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவிக்கு தேனாம்பேட்டையை சேர்ந்த எலக்ட்ரீசியன் கணேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக மாணவியிடம் தகாத முறையில் நடந்து உள்ளார். இதுபற்றி மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். பாலியல் சீண்டல் குறித்த விவரங்களை சிறுமி கூறியவுடன் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கணேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.