உள்ளூர் செய்திகள்

வருகிற 14-ந்தேதி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்

Published On 2023-07-10 08:07 GMT   |   Update On 2023-07-10 08:07 GMT
  • தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
  • தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தொடரில் பங்கேற்று விவாதிப்பது தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாயலத்தில் வருகிற 14-ந்தேதி காலை 10.30 மணிக்கு எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News