உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் பல் மருத்துவமனையில் ரூ.2 லட்சம் கொள்ளை

Published On 2023-07-18 12:45 IST   |   Update On 2023-07-18 12:45:00 IST
  • ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள 4 ரோடு பகுதியில் மர்ம நபர் பணம் திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி:

தருமபுரி சோகத்தூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் மதன்குமார் (வயது 30). பல் டாக்டரான இவர் தருமபுரி 4ரோடு பென்னாகரம் சாலையில் தனியார் பல் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் தனது கிளினிக் முன்பக்க கதவை மட்டும் மூடிவிட்டு அருகேயுள்ள கடைக்கு மதன்குமார் சென்றார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்த போது கிளினிக்கின் கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.2 லட்சத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மதன் குமார் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் மதன்குமார், தனது கிளினிக்கின் கதவை பூட்டாமல் விட்டு சென்றதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு உள்ளே புகுந்து லாக்கரில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடி சென்றது தெரியவந்தது.

மேலும் கிளினிக்கின் பக்கத்தில் உள்ள மெடிக்கல் கடையிலும் மர்ம நபர்கள் ரூ.6 ஆயிரத்தை திருடி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள 4 ரோடு பகுதியில் மர்ம நபர் பணம் திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News