உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி ஊழியரை கடத்திய மர்மநபர்கள்- தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை

Published On 2023-01-22 12:13 IST   |   Update On 2023-01-22 12:13:00 IST
  • மதுரை மாநகராட்சி சம்மட்டிபுரம் வரி வசூல் மையத்தில் சுகாதார பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சரண்ராஜ்.
  • சரண்ராஜ் நேற்று பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது மர்மநபர்கள் அவரை காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

மதுரை:

மதுரையில் மாநகராட்சி சுகாதார ஊழியர் மர்மநபர்களால் நள்ளிரவில் கடத்தப்பட்டதையடுத்து அவரை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை மாநகராட்சி சம்மட்டிபுரம் வரி வசூல் மையத்தில் சுகாதார பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சரண்ராஜ் (45). இவர் நேற்று பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது மர்மநபர்கள் அவரை காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அனைத்து இடங்களிலும் தேடினர். சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. ஆனாலும் அந்த கும்பல் அவரை எங்கு கடத்தி சென்றது? என்ற விவரம் தெரியவில்லை.

இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கடத்தப்பட்ட சரண்ராஜை தீவிரமாக தேடி வருகிறார்கள். மாநகராட்சி ஊழியர் கடத்தலுக்கு காரணம் என்ன? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரையில் மாநகராட்சி ஊழியர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News