உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் பகுதியில் வசூல் பணம் இரட்டிப்பு தருவதாக ரூ.6 கோடி மோசடி- ராணிப்பேட்டை தம்பதி மீது புகார்

Published On 2022-07-17 12:32 IST   |   Update On 2022-07-17 12:32:00 IST
  • நம்பி ஏராளமானோர் பணம் செலுத்தி இருந்தனர். சுமார் ரூ.6 கோடி வரை பணம் வசூலித்ததாக தெரிகிறது.
  • போலீசார் ராணிப்பேட்டை தம்பதி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், கோனேரி குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோரிடம் ராணிப்பேட்டை, வன்னிவேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் பணம் முதலீடு செய்தால் 6 மாதத்தில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று கூறி அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக தெரிகிறது.

ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் ரூ.10 ஆயிரம் கிடைக்கும், ஆறு மாதம் கழித்து அதே ஒரு லட்ச ரூபாய்க்கு 2 லட்சம் தருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இதனை நம்பி ஏராளமானோர் பணம் செலுத்தி இருந்தனர். சுமார் ரூ.6 கோடி வரை பணம் வசூலித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அவர்களுக்கு கூறியபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் முறையான பதில் கூறவில்லை.

இதனால் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பணம் கட்டியவர்கள் இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர். போலீசார் ராணிப்பேட்டை தம்பதி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News