உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டில் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-11-07 17:42 IST   |   Update On 2022-11-07 17:42:00 IST
  • நெடுஞ்சாலையோரம் வசிப்பதால் கனரக வாகனங்கள் செல்லும் போது தடதடவென ஒரு வித அதிர்வு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
  • செங்கல்பட்டில் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு:

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு சாலை பழுதடைந்து காணப்படுகிறது. சுமார் 10 அடிக்கு ஒரு பள்ளம் உள்ளதை காணமுடிகிறது.

பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த பள்ளங்களில் விழுந்து செல்கின்றனர். 3 நாள் மழைக்கே ஜல்லி தனியாக மண் தனியாக தார் தனியாக பிரிந்து காணப்படுகிறது. அரைகுறையாக பணியை பாதியில் விட்டு விட்டதாக வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். இருங்குன்றம் பள்ளி, புலிப்பாக்கம். ரஜா குளிப்பேட்டை, பரனூர், பகத்சிங் நகர், சத்யாநகர், திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம், சிங்கப்பெருமாள் கோவில் முதல் பெருங்களத்தூர் வரை தேசிய நெடுஞ்சாலையோரம் வசிப்பதால் கனரக வாகனங்கள் செல்லும் போது தடதடவென ஒரு வித அதிர்வு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு செய்து விரைவில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூட வேண்டும், மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News