உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2வது நாளாக நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை

Published On 2022-06-21 15:56 IST   |   Update On 2022-06-21 15:56:00 IST
  • மதுராந்தகத்தில் 2 செ.மீட்டர் மழையும் பெய்தன.
  • 2வது நாளாக நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தன.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளாக சிங்கப்பெருமாள் கோயில், புலிப்பாக்கம், நென்மேலி, பட்ரவாக்கம், வெங்கிடாபுரம், தென்மேல்பாக்கம், குன்னவாக்கம். உள்ளிட்ட பல இடங்களில் 2 -வது நாளாக. நேற்றும் நள்ளிரவு திடீரென மழை பெய்ய தொடங்கின சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் புரண்டோடின. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 24 செ.மீட்டர் மழையும், கேளம்பாக்கத்தில் 15.6 செ.மீட்டர் மழையும், திருப்போரூரில் 14.6 செ.மீட்டர் மழையும், செங்கல்பட்டில் 10.4 செ.மீட்டர் மழையும், திருக்கழுக்குன்றத்தில் 10.4 செ.மீட்டர் மழையும், செய்யூரில் 10 செ.மீட்டர் மழையும், தாம்பத்தில் 8 செ.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக மதுராந்தகத்தில் 2 செ.மீட்டர் மழையும் பெய்தன.

Tags:    

Similar News