உள்ளூர் செய்திகள்

செக்கானூரணி அருகே கோவில் திருவிழாவில் வாலிபரை அடித்துக்கொன்ற 10 பேர் கைது

Published On 2023-02-20 10:57 IST   |   Update On 2023-02-20 10:57:00 IST
  • தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த தாமோதரன், அபினாஸ் உள்பட 10 பேர் பொன்னாங்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
  • தாமோதரன், அபினாஸ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து தேனி ஜெயிலில் அடைத்தனர்.

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கருமாத்தூரில் உள்ள பொன்னாங்கள் கோவிலில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த தாமோதரன், அபினாஸ் உள்பட 10 பேர் பொன்னாங்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் கோவில் அருகே படுத்து தூங்கினர். அப்போது கருமாத்தூரை சேர்ந்த தங்கபாண்டி மற்றும் அவரது நண்பர் நீதி(வயது21) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி தாமோதரன் என்பவர் வைத்திருந்த செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது.

உடனே அவர்கள் 2 பேரும் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டுள்ளனர். அதை கேட்டு அருகில் படுத்திருந்த அவரது ஊரைச் சேர்ந்த சிலர் தங்கப்பாண்டி மற்றும் நீதியை பிடிக்க முயன்றுள்ளனர். இதில் தங்கப்பாண்டி தப்பி ஓடிவிட்டார். நீதியை, தாமோதரன் தரப்பை சேர்ந்தவர்கள் பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் செக்கானூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட நீதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சேர்ந்த தாமோதரன், அபினாஸ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து தேனி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News