உள்ளூர் செய்திகள்

விருகம்பாக்கத்தில் பஸ் டிரைவர் மீது தாக்குதல்- 3 பேர் கைது

Published On 2022-07-04 09:50 GMT   |   Update On 2022-07-04 09:50 GMT
  • விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் சந்திப்பில் பஸ் வந்தபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென பஸ்சை வழிமறித்தனர்.
  • அவர்கள் பஸ்சுக்குள் ஏறி “எங்களுக்கு வழிவிட மாட்டாயா” என்று கேட்ட படி டிரைவர் மணிவண்ணனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தாம்பரம் நோக்கி மாநகர பஸ் (எண் 70சி) புறப்பட்டு சென்றது. பஸ்சை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த டிரைவர் மணிவண்ணன்(35) ஓட்டினார். விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் சந்திப்பில் பஸ் வந்தபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென பஸ்சை வழிமறித்தனர்.

அவர்கள் பஸ்சுக்குள் ஏறி "எங்களுக்கு வழிவிட மாட்டாயா" என்று கேட்ட படி டிரைவர் மணிவண்ணனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரை தாக்கிய சதீஷ் குமார், அஜய், சந்துரு ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News