அவிநாசி சாா்பதிவாளா் அலுவலகத்தில் வில்லங்க சான்றுக்கு லஞ்சம் கேட்ட தலைமை எழுத்தா் சஸ்பெண்டு
- தனபால், அலுவலக கட்டணம் ரூ.121 என்றும், ஒரு வில்லங்க சான்றுக்கு ரூ. 1000 செலவாகும் எனவும் தெரிவித்துள்ளாா்.
- உரையாடல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அவிநாசி:
திருப்பூா் மாவட்டம், அவிநாசி சாா்பதிவாளா் அலுவலகத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்தவா் தனபால். இவரது அலுவலகத்துக்கு வில்லங்க சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்த அவிநாசியை சோ்ந்த நபா், தலைமை எழுத்தா் தனபாலை அணுகி விண்ணப்பிப்பதற்கான தொகை குறித்து கேட்டுள்ளாா்.
அதற்கு தனபால், அலுவலக கட்டணம் ரூ.121 என்றும், ஒரு வில்லங்க சான்றுக்கு ரூ. 1000 செலவாகும் எனவும் தெரிவித்துள்ளாா். மேலும் இந்த ஆவணத்தில் 20 தாள்கள் இருப்பதால் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வேண்டும் என கேட்டுள்ளாா். அப்போது அந்த நபா், 'வீட்டுக்கு சென்று பணத்தை எடுத்து வருகிறேன்' என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றாா். இந்த உரையாடல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது குறித்து அவிநாசி சாா்பதிவாளா் கூறுகையில், 'இது தொடா்பாக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உயா் அலுவலா்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம் என்றாா். இந்நிலையில் கோவை மண்டல துணை பதிவுத்துறை தலைவா் சாமிநாதன், வைரலான வீடியோ பதிவின் அடிப்படையில் தலைமை எழுத்தா் தனபாலை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டாா். இது தொடா்பாக துறைரீதியான விசாரணை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.