உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் வீட்டில் நாட்டுவெடிகுண்டு தயாரித்தவர் கைது

Published On 2023-01-25 15:57 IST   |   Update On 2023-01-25 15:57:00 IST
  • தாயார் குளம் அருகே பதுங்கி இருந்த பரிவட்டம் விக்கியை போலீசார் கைது செய்தனர். அப்போது தப்பி ஓட முயன்ற அவருக்கு கை முறிந்தது.
  • பதுங்கி இருந்த மணிகண்டன், வசந்தகுமார் ஆகியோரையும் போலீசார் பிடித்தனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், மாண்டூ கணீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்து வந்தது தெரிந்தது.

இதுதொடர்பாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த புகழேந்தி, திருத்தணியை சேர்ந்த ஜெயக்குமார் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய வெடிபொருட்கள், ஆணி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

எதிர்தரப்பை சேர்ந்த ஒருவரை தீர்த்து கட்ட அவர்கள் வெடிகுண்டு தயாரித்து வந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான காஞ்சிபுரம், தாயார் குளம் பகுதியை சேர்ந்த பரிவட்டம் விக்கி என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே தாயார் குளம் அருகே பதுங்கி இருந்த பரிவட்டம் விக்கியை போலீசார் கைது செய்தனர். அப்போது தப்பி ஓட முயன்ற அவருக்கு கை முறிந்தது.

அவருடன் பதுங்கி இருந்த மணிகண்டன், வசந்தகுமார் ஆகியோரையும் போலீசார் பிடித்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. கை முறிந்த பரிவட்டம் விக்கிக்கு அரசு ஆஸ்பத்திரியில் மாவு கட்டு போடப்பட்டது.

Tags:    

Similar News