உள்ளூர் செய்திகள்

சாலிகிராமத்தில் அம்மா உணவகத்தில் பெண் ஊழியர்கள் மோதல்- போலீசில் புகார்

Published On 2022-06-30 06:58 GMT   |   Update On 2022-06-30 06:58 GMT
  • தாமரைச்செல்வி. சாலிகிராமம் வி.வி கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் தாமரைச்செல்வி வேலை பார்த்து வருகிறார்.
  • இவர் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டபோது அங்கு வந்த சூப்பர்வைசர் ராதிகா என்பவர், “இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை” என்று கூறி கண்டித்தார்.

போரூர்:

விருகம்பாக்கம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வி. சாலிகிராமம் வி.வி கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டபோது அங்கு வந்த சூப்பர்வைசர் ராதிகா என்பவர், "இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை" என்று கூறி கண்டித்தார். இதில் தாமரைச்செல்விக்கும், ராதிகாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் தாமரைச்செல்வியின் காதில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News