அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது. நீட் தேர்வுக்காக திமுகவின் உண்ணாவிரத போராட்டம் நாடகம். திமுக மத்தியில் கூட்டணியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் இருக்காது என கூறினார்கள்- ஈ.பி.எஸ்.
மீனவர்களுக்கு பாதுகாப்பான அரசு அதிமுகதான். கச்சத்தீவு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம். கச்சத்தீவை மீட்க திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்களின் வாக்குகளை பெறவே கச்சத்தீவை மீட்போம் என பொய்யான வாக்குறுதியை அளித்தது. சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்குமான கட்சி அதிமுக- ஈ.பி.எஸ்.
மதுரையில் எதை துவங்கினாலும் வெற்றி, வெற்றி, வெற்றிதான். எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. அதிமுகவை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் கிடையாது. தொண்டனாக இருந்து உழைப்பாள் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்- ஈபிஎஸ்.
முதலீட்டாளர்கள் மாநாடு மூலம், பலருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. அதிமுக ஆட்சியின்போது மருத்துவ துறையில் சாதனை படைத்தோம். அதிமுக ஆட்சியின் அனைத்து துறைகளிலும் விருதுகளை பெற்றோம்- எடப்பாடி பழனிசாமி.
பல ஆண்டுகளாக ஏரி, குளங்கள் தூர்வாரப்படால் இருந்தது. மழை நீரை சேமிக்க குடிமராமத்து திட்டம் கொண்டு வந்த அரசு, அதிமுக அரசு. டெல்டா மாவட்டங்களை காத்தது அதிமுக அரசாங்கம்தான்.
டெல்டா விவசாயிகள் தங்கள் நிலத்தை பாதுகாக்குமாறு கோரிக்கைகள் வைத்தனர். நான் ஒரு விவசாயி, விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்களை புரிந்தவன் நான். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம்- எடப்பாடி பழனிசாமி.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வாதாடி தீர்ப்பு பெற்றது அதிமுக அரசு.
10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 50 ஆண்டு முன்னேற்றத்தை பார்த்தோம். நான் முதல்வரான போது 10 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி தாக்குபிடிக்குமா ? என்றார்கள். நான் 4 ஆண்டுகள் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தேன்- எடப்பாடி பழனிசாமி.
ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில் நினைவிடம் கட்டப்பட்டது. 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 50 ஆண்டு முன்னேற்றத்தை பார்த்தோம்- எடப்பாடி பழனிசாமி.
எம்.ஜி.ஆர் நூற்றாண்ட விழாவை சிறப்பாக நடத்தி காட்டினோம். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டினோம்- எடப்பாடி பழனிசாமி.