உள்ளூர் செய்திகள்

ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்கு வந்து காணாமல்போன பெண் பிணமாக மீட்பு

Published On 2023-01-01 13:58 IST   |   Update On 2023-01-01 15:52:00 IST
  • கோவைக்கு வந்து மாயமான திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீயாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
  • பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொன்று உடலை கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடவள்ளி:

கோவை ஆலாந்துறையை அடுத்த செம்மேடு அருகே ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் இளம்பெண்ணின் உடல் கிடப்பதாக ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் வந்தது.

தகவலின் பேரில் போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டனர்.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட பெண் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்து அங்கிருந்து மாயமான திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் திருப்பூரில் இருந்து கோவைக்கு விரைந்து அது சுபஸ்ரீதான் என்பதை உறுதி செய்தனர்.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொன்று உடலை கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து தெரிய வரும்.

Tags:    

Similar News